{"widgetType": "slider","widgetLabel": "slider"}
மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே! :
அஸ்ஸலாமு அலைக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹீ ) அவர்கள் தமது போர்வையினை தரையில் விரித்து அதில் தானும் அமர்ந்து ஹஸரத் அலி (அலைஹிஸ்ஸலாம்), பாத்திமா ( அலைஹாஸலாம்), ஹஸரத் ஹஸன் ( அலைஹிஸ்ஸலாம்), ஹஸரத் ஹூஸைன் ஆகியோரையும் அதில் அமரச் செய்து நாங்கள் தாம் அஹ்லுல் பைத்தினர் என நவின்றார்கள்.
மேற்குறித்த ஐவரின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் வழித்தோன்றல்களான இமாம். ஸைனுலாப்தீன், இமாம். பாக்கீர், இமாம். ஜஅபர் சாதிக், இமாம். மூஸா காழிம், இமாம். அலி ரிழா, இமாம். ஜவாத், இமாம். ஹாதி, இமாம். ஹஸன் அஸ்கரி மற்றும் இமாம். மஹ்தி (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் அஹ்லுல் பைத்தினரின் பணியினை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அஹ்லுல் பைத்தினரே! உங்களை பரிசுத்தமாக்கவே அல்லாஹ் விரும்புகிறான். என்பன போன்ற இறைவசனங்களும்,
நான் அறிவின் நகரமென்றால்....அதன் நுழைவாயில் அலி.
எனக்குப் பின் பன்னிரண்டு இமாம்கள் வருவார்கள். அவர்கள் குறைஷிக் குலத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
போன்ற ஹதீஸ்களும் காணப்பட்ட போதிலும் இன்று அஹ்லுல் பைத்களை பின்பற்றுபவர்கள் கேவலமாக நோக்கப்படுகின்றனர்.
அஹ்லுல் பைத்தினரை பின்பற்றுவோர் தமது கொள்கைகளை பின்பற்றுவதற்காக இவ் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது
